முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் அஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்...!

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் அஜய் ராவத் பாஜகவில் இணைந்தார்.
உத்தரகாண்ட்,
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இளைய சகோதரரும், ஓய்வுபெற்ற இராணுவ வீரருமான கர்னல் விஜய் ராவத், உத்தரகாண்ட் முதல்-மந்த்ரி புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் தன்னை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார்.
பாஜகவில் இணைந்த பின்னர் அஜய் ராவத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
"எனது தந்தை ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் இருந்தார். இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜகவில் இணைவதற்காக நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கும் சிந்தனையும் மிகவும் புத்திசாலித்தனமானது மற்றும் எதிர்காலம் சார்ந்தது" என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






