மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அலுவலகம் வருகை


மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சக அலுவலகம் வருகை
x
தினத்தந்தி 1 Feb 2022 3:36 AM GMT (Updated: 1 Feb 2022 4:11 AM GMT)

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் தற்போது நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கியது. அதன்படி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.

இந்நிலையில், 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

மத்திய பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வந்துள்ளார். நிதி அமைச்சகத்தில் இருந்து பட்ஜெட் விவரங்கள் அடங்கிய லெப்டாப் உடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்னும் சில நிமிடங்களில் சந்திக்க உள்ளார். 

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றத்திற்கு 10 மணியளவில் வர உள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சரவம்பு அதிகரிக்கப்படுமா?, வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா? என பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

Next Story