பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் ; 2022 பட்ஜெட்டுக்கு ஒப்புதல்


பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் ; 2022 பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
x
தினத்தந்தி 1 Feb 2022 5:08 AM GMT (Updated: 1 Feb 2022 6:35 AM GMT)

பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து நாடாளுமன்றம் வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய மந்திரிகளும் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்

புதுடெல்லி

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இதையொடடி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார்.இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

தொடர்ந்து 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அமைச்சரவை முதலில் ஒப்புதல் அளிக்கப்படும்.மத்திய அமைச்சரவை கூட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.தொடர்ந்து பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரத் துறை மந்த்திரி  பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோரும் நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.

Next Story