உத்தரப்பிரதேசம்: படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி


image courtesy: ANI
x
image courtesy: ANI
தினத்தந்தி 13 April 2022 6:46 PM GMT (Updated: 13 April 2022 6:46 PM GMT)

உத்தரப்பிரதேசம் குஷிநகரில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஷிநகர்,

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நேற்று காலை குஷிநகர் மாவட்டத்தின் கடா பகுதிக்கு அருகிலுள்ள நாராயணி ஆற்றில் இந்தச் சம்பவம் நடந்தது. 10 பேர் படகில் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள், ஒரு இளைஞர் என 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் மீட்கப்பட்டு கடாவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story