ராஜஸ்தானில் ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றி


ராஜஸ்தானில் ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றி
x
தினத்தந்தி 3 May 2022 3:40 AM GMT (Updated: 3 May 2022 3:40 AM GMT)

ராஜஸ்தானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட சிறிய ஹோவிட்சர் ரக பீரங்கி சோதனை வெற்றியடைந்து உள்ளது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்து உள்ளது.


ஜெய்சல்மர்,



ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏ.டி.ஏ.ஜி.எஸ். எனப்படும் நவீன ஹோவிட்சர் ரக பீரங்கி பரிசோதனை ஏப்ரல் 26ந்தேதி முதல் மே 2ந்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது.

இந்திய ராணுவத்தின் பீரங்கிகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தில் ஈடுபட்டு உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த ஹோவிட்சர் ரக பீரங்கியை டி.ஆர்.டி.ஓ. மேம்படுத்தி உள்ள நிலையில், பாரத் போர்ஜ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இவற்றை ராணுவ உபயோகத்திற்காக வருங்காலங்களில் உற்பத்தி செய்ய உள்ளன.

இதனால், போபர்ஸ் ஹோவிட்சர்களுக்கு பதிலாக இந்திய ராணுவ பீரங்கிகளின் படை வரிசையில் இந்த ரக பீரங்கிகள் முக்கிய இடம் பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story