டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422- பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 May 2022 4:24 PM GMT (Updated: 8 May 2022 4:24 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக புதிதாக உயிரிழப்பு இல்லை. தொற்று பாதிப்பு விகிதம் 5.34 சதவிகிதமாக உள்ளது  தொற்று பாதிப்பைக் கண்டறிய 26,467- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 94 ஆயிரத்து 254- ஆக  உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 179- ஆக உள்ளது. டெல்லியில் நேற்று  1,407- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்ட்டு இருந்தது. தொற்று பாதிப்பால் இருவர் உயிரிழந்து இருந்தனர். பாதிப்பு விகிதம் 4.72 சதவிகிதமாக இருந்தது. 

Next Story