ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 15 May 2022 9:25 AM GMT (Updated: 15 May 2022 10:00 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார்.

ஸ்ரீநகர், 

 ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில்  லிட்டர் என்ற இடத்தில் அமைந்துள்ள துர்காவங்கம் பாலத்தை ஒட்டிய பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  பாதுகாப்பு எப்போதும் நிறைந்திருக்கும் இந்த பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்.

 காயம் அடைந்த நபர் அப்பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ஷோயப் அகமது கானி கானி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. காயம் அடைந்த நபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.   துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். 

Next Story