குஜராத்: தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலி; இடிபாடுகளில் 20 பேர் சிக்கியிருப்பதாக தகவல்!

இந்த கோர விபத்தில் 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அகமதாபாத்,
குஜராத்தின் மோர்பியில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் மூவர் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மோர்பியில் உள்ள ஒரு உப்பு தொழிற்சாலையில், சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாக்கு மூட்டைகளில் உப்பு நிரப்பும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகம் ஜேசிபி மூலம் உயிரிழந்தோர் உடல்களை வெளியே எடுத்து வருகின்றனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
Gujarat | At least 12 people died after a wall of a salt factory in Morbi's Halvad GIDC collapsed
— ANI (@ANI) May 18, 2022
12 people have died after an incident happened at Sagar Salt Factory in Halvad GIDC. Government stands with the families of the deceased: State Minister Brijesh Merja pic.twitter.com/lSBAaw2jJB
தொழிலாளர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடைய குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
The tragedy in Morbi caused by a wall collapse is heart-rending. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Local authorities are providing all possible assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) May 18, 2022
Related Tags :
Next Story






