சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் புதைத்துவைத்த குண்டு வெடித்ததில் 3 போலீசார் காயம்..!


சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் புதைத்துவைத்த குண்டு வெடித்ததில் 3 போலீசார் காயம்..!
x

நக்சலைட்டுகள் புதைத்துவைத்த குண்டு வெடித்ததில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் டெகமேடா மலைப்பகுதி அருகே மத்திய ரிசர்வ் படை போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில், 3 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் பெயர்கள் அமித் கிர்தானியா, ரிபன்குமார் சாகூ, விஷால்குமார் ஆகும்.

காயமடைந்த போலீஸ்காரர்கள் முதலில், பிஜப்பூர் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், பின்னர், மேல்சிகிச்சைக்காக தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படு வருகிறது. குண்டு வெடித்து போலீசார் காயம் அடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story