இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா - 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை


இந்தியாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா - 7-வது நாளாக உயிரிழப்பு இல்லை
x

கோப்புப்படம்

இந்தியாவில் நேற்று மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 40 பேர் என்ற அளவில் தினசரி பாதிப்பு குறைந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 886 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 16 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,463 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் உயிர்ப்பலி இல்லை. அதனால், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.


Next Story