இந்தியாவில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தியாவில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம் 

இந்தியாவில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டில் நேற்று முன்தினம் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 963 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 45 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1 குறைந்தது. மொத்தம் 1,502 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவுக்கு நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 928 ஆக நீடிக்கிறது.


Next Story