டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்


டெல்லி விமான நிலையத்தில்  45 துப்பாக்கிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 July 2022 12:12 PM GMT (Updated: 13 July 2022 12:12 PM GMT)

டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்ட்டன

புதுடெல்லி,

டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு டிராலி பைகளில் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன,வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, இல்லையா? என்பதை பாலிஸ்டிக்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தும். முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் செயல்படும் , பயன்படுத்த முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Next Story