இந்தியாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா - 3-வது நாளாக உயிர்ப்பலி இல்லை


இந்தியாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா - 3-வது நாளாக உயிர்ப்பலி இல்லை
x

இந்தியாவில் நேற்று மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 49 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 95 ஆயிரத்து 4 ஆக அதிகரித்தது.

24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 38 பேர் குணம் அடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 625 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 11 அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,464 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆக நீடிக்கிறது.


Next Story