மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!

மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக 5 புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.
மண்ட்லா,
மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா தேசிய புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு டிஜே என்னும் 9 வயது பெண் புலி சமீபத்தில் 5 குட்டிகளை ஈன்றது. தற்போது அவை ஆரோக்கியத்துடன் பூங்காவை சுற்றி நடமாடி வருகின்றன. இதனை ஆர்வமுடன் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் பூங்காவுக்கு வருகிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 526 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயரலாம் என தெரிகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





