சண்டிகரில் 52-வது ரோஜா மலர்கள் திருவிழா கோலாகலம்

பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
சண்டிகர்,
சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற ஜாகீர் ஹுசைன் ரோஜா பூங்காவில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் ரோஜா மலர்கள் திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் 52-வது ரோஜா மலர்கள் திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி(இன்று) வரை 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல விதமான ரோஜா மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அங்கே விதவிதமாக பூத்துக்குலுங்கிய வண்ண மலர்களை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





