இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 5,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 5,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x

கோப்புப்படம் 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 5-ந் தேதி 4 ஆயிரத்தை தாண்டியும், 6-ந் தேதி 5 ஆயிரத்தை தாண்டியும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது. 6 ஆயிரத்து 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,357- ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 32,814- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story