இந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா - தொற்றுக்கு ஒருவர் பலி


இந்தியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா - தொற்றுக்கு ஒருவர் பலி
x

இந்தியாவில் நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று முன்தினம் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மேலும் 55 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இந்த தொற்று பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 113 பேர் மீண்டனர். இதுவரை இந்த தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 59 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,653 ஆக சரிந்தது.

தொற்றில் இருந்து மீள முடியாமல் நேற்று முன்தினம் 2 பேர் இறந்தனர். நேற்று ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். இதையடுத்து தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.


Next Story