பாகிஸ்தான் சிறையில் 560 குஜராத் மீனவர்கள்


பாகிஸ்தான் சிறையில் 560 குஜராத் மீனவர்கள்
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் சிறையில் 560 குஜராத் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆமதாபாத்,

அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று, தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில மீனவர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி கணக்குப்படி, குஜராத் மீனவர்கள் 560 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவையில் நேற்று ஒரு கேள்விக்குப் பதிலளித்த மாநில மீன்வளத்துறை மந்திரி ராகவ்ஜி படேல் இத்தகவலை தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 274 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021-ம் ஆண்டில் 193 பேரும், கடந்த ஆண்டில் 81 பேரும் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதேநேரம் கடந்த 2 ஆண்டுகளில் 55 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மந்திரி ராகவ்ஜி படேல், பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்ட மீனவர்களின் 323 குடும்பங்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தினசரி ரூ.300 உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் 428 குடும்பங்களுக்கு இவ்வாறு உதவித்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்திய மீனவர்களைப் போல, இந்திய கடற்பகுதிக்கு வரும் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.


Next Story