ஜார்கண்ட்: கடனுக்கு தராததால் ஸ்வீட் கடை மீது ஆசிட் வீச்சு - 7 பேர் காயம்


ஜார்கண்ட்: கடனுக்கு தராததால் ஸ்வீட் கடை மீது ஆசிட் வீச்சு - 7 பேர் காயம்
x

ஜார்கண்டில் கடனுக்கு உணவு கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர், ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைந்தனர்.

தும்கா,

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், ஸ்வீட் கடை உரிமையாளர், கடனுக்கு உணவு கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைந்தனர்.

ஜேர்முண்டி காவல் நிலையத்திற்குட்பட்ட ஹரிபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்வீட் கடை ஒன்றில் நபர் ஒருவர் கடனுக்கு உணவு கேட்டுள்ளார். கடை உரிமையாளர் கடனுக்கு கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த குற்றம் சாட்டப்பட்ட நபர், வீட்டிற்குச் சென்று ஆசிட்டுடன் வந்து தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த நபர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பாக கடை உரிமையாளரின் வாக்குமூலத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story