வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 8 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு


வாலிபரை கொல்ல முயன்ற வழக்கில் 8 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
x

சிக்கமகளூருவில், தியேட்டாில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொல்ல முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;

சினிமா டிக்கெட்

சிக்கமகளூரு டவுன் பகுதியை சேர்ந்தவர் பரத்(வயது 25). இவர், கடந்த 29-ந்தேதி தியேட்டரில் புதிய கன்னடப்படம் பார்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றிருந்தார். அப்போது தியேட்டரில் டிக்கெட் கவுண்டரில் இவருக்கும், மற்றொரு கும்பலுக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கும்பல், பரத்தை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.இதையடுத்து பரத்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


8 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா தலைமையில் 4 தனிப்படை அமைத்து தலைமறைவானவர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். கைதானவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story