இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா - தொற்றால் பலி இல்லை


இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா - தொற்றால் பலி இல்லை
x

கோப்புப்படம் 

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு தினமும் 100-க்குள் அடங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு தினமும் 100-க்குள் அடங்குகிறது. நேற்று முன்தினம் 55 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்தது. புதிதாக 80 பேருக்கு நேற்று தொற்று பாதிப்பு உறுதியானது. இதுவரை தொற்று பாதிப்புக்கு 4 கோடியே 49 லட்சத்து 93 ஆயிரத்து 952 பேர் ஆளாகி உள்ளனர்.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 63 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 60 ஆயிரத்து 379 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 17 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,670 ஆக உயர்ந்தது.

தொற்றில் இருந்து மீள முடியாமல் நேற்று முன்தினம் ஒருவர் மட்டுமே இறந்தார். நேற்று தொற்றால் இறப்பு ஏதும் இல்லை. இதனால் தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஆக நீடிக்கிறது.


Next Story