கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த விவசாயி கொலை: பெண்ணின் மகன்கள் கைது


கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த விவசாயி கொலை:  பெண்ணின் மகன்கள் கைது
x

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த விவசாயியை கொலை செய்த பெண்ணின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

விஜயாப்புரா: கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் சடச்சனாவை சேர்ந்தவர் துக்காராம்(வயது 60). இவர் விவசாயி ஆவார். இந்த நிலையில் துக்காராமுக்கும், தங்கேவ்வா(45) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதுகுறித்து அறிந்ததும் தங்கேவ்வாவின் மகன்களான சதாசிவா, சித்து, சிக்கு ஆகியோர் துக்காராமிடம் தங்களது தாயுடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க துக்காராம் மறுத்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தங்கேவ்வாவின் வீட்டிற்கு சென்ற துக்காராம், தங்கேவ்வாவுடன் உல்லாசம் அனுபவித்து கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது அங்கு வந்த சதாசிவா, சித்து, சிக்கு ஆகியோர் வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து துக்காராமை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தங்கேவ்வா, சதாசிவா, சித்து, சிக்கு ஆகியோர் தப்பி சென்றனர். கொலை சம்பவம் பற்றி அறிந்ததும் சடச்சனா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துக்காராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலை மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் வைத்து சதாசிவா, சித்து, சிக்குவை போலீசார் கைது செய்தனர்.


Next Story