என்.ஆர்.புரா அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


என்.ஆர்.புரா அருகே  மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

என்.ஆர்.புரா அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா எம்மக்கி கிராமத்தை சேர்ந்தவர் உல்லாஸ் (வயது22). இவர் என்.ஆர்.புரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று உல்லாஸ் எம்மக்கி கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் என்.ஆர்.புராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து உல்லாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் உல்லாஸ் படுகாயம் அடைந்தார்.

அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உல்லாஸ் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலேஹொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story