மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


மைனர் பெண்ணை கற்பழித்த  வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x

மைனர் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

மங்களூரு;

மைனர் பெண் கற்பழிப்பு

உடுப்பி அருகே கொடவூரில் மைனர் பெண், பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த பெண்ணுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த கிரண்(வயது 28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிரண், மைனர் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி கற்பழித்துள்ளார். மேலும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். இதற்கு கிரணின் சகோதரியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிலர், மைனர் பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளிடம் கேட்டுள்ளனர். அப்போது மைனர் பெண், பெற்றோரிடம் நடந்த சம்பவத்ைத கதறி அழுதபடி கூறியுள்ளாள்.

இதுகுறித்த புகாரின்பேரில் உடுப்பி மகளிர் போலீசார், கிரண் மற்றும் அவரது சகோதரியை கைது செய்தனர். கைதான கிரண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

20 ஆண்டுகள் சிறை/

இதுதொடர்பாக உடுப்பி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்றுமுன்தினம் வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி சீனிவாச சுவர்ணா தீர்ப்பு கூறினார்.

அதில் மைனர் பெண்ைண கற்பழித்த கிரணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.


Next Story