ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: காங்கிரசின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: காங்கிரசின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரசின் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

தேர்தல் சீர்திருத்த நடைமுறை யின் ஒரு பகுதியாக, வாக்காளர் விவரத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல்ஆணையம் கொண்டு வந்தது.இதன் மூலம் போலி வாக்காளர்களையும் அகற்ற முடியும் எனமத்திய அரசு கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இந்த சட்டம் குடிமக்களாக இல்லாதவர்களையும் ஓட்டுப் போட வழிவகுக்கும் என கூறுகின்றன.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், இந்தசட்ட மசோதாவில் உள்ள குறைகள் குறித்து விவாதம் நடத்தாமல்,24 மணி நேரத்துக்குள் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தனிநபர் அந்தரங்க உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வாக்காளர் அடை யாள அட்டையுடன், ஆதார் எண் இணைப்பது விருப்பத்துடன் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாளத்துடன் இணைப்பது விருப்பத்துடன் கூடியது என தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்து தேர்தல் சட்டத்தை எதிர்த்த மனு என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளார்.


Next Story