இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163- பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163- பேருக்கு கொரோனா
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 163- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,380 ஆக குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் மராட்டிய மாநிலத்தில் 2 பேரும் டெல்லியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கேரளா ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த 6 பேரின் உயிரிழப்பை பதிவு செய்துள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 220.03 கோடியாக உள்ளது.


Next Story