அக்னிபத் கலவரம்: டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு..!


அக்னிபத் கலவரம்: டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு..!
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், பீகார், உத்தரபிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரெயில்களுக்கு தீ வைப்பு என இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருவதால், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடையும் நிலையில் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம், ஐடிஓ நிலையம், தன்சா பஸ் ஸ்டாண்ட் மெட்ரோ நிலையம் மற்றும் ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையம் ஆகியவை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் போராட்டம் அரியானா, உத்தர பிரதேசம், பீகாரை தொடர்ந்து டெல்லியிலும் பரவிய நிலையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story