மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம்: துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார் அஜித் பவார்


மராட்டிய அரசியலில் திடீர் திருப்பம்:  துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார் அஜித் பவார்
x
தினத்தந்தி 2 July 2023 9:47 AM GMT (Updated: 2 July 2023 10:15 AM GMT)

மராட்டியத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார் அஜித் பவார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்தார் அஜித் பவார். இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பாஜக கூட்டணியில் இன்று இணைந்தனர்.

இந்தநிலையில், சிவசேனா - பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

மராட்டிய மாநிலத்தில் 8ஆவது துணை முதல்-மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.

2019ல் பாஜகவுடன் இணைந்து மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்று பின்னர் விலகினார். பதவியேற்ற 80 மணிநேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் மீண்டும் இணைந்தார். பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட மகா விலாஸ் அகாதி கூட்டணியில் மீண்டும் துணை முதல்-மந்திரி ஆனார் அஜித் பவார்.

* மராட்டியத்தில் 20210-2014-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருமுறை துணை முதல்-மந்திரியாக இருந்துள்ளார்.

* 2019-ம் ஆண்டில் திடீரென அதிகாலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரி ஆனார், ஆனால் பெரும்பான்மை இல்லாததால் 3 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.

* 2019-2022 வரை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தார்.

* தற்போது மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரியாக ஆகி உள்ளார் அஜித் பவார்.


Next Story