அமர்நாத் புனித யாத்திரை: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு.!


அமர்நாத் புனித யாத்திரை: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு.!
x

கோப்புப்படம் 

அமர்நாத் யாத்திரை சென்றபோது பலியான பக்தர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவிலில் ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஜூலை 1-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரையில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் சுமார் 3,800 மீட்டர் உயர பனிமலையில் பக்தர்கள் ஏறியபோது 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பு வந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை சென்றபோது பலியான பக்தர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.


Next Story