ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் - அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்


ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் - அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்
x

ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் - அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகிக்கொள்ள வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளார்.

பிரகாஷ் அம்பேத்கர் என்பவர் அம்பேத்கரின் பேரன் ஆவார். வஞ்சித் பகுஜன் ஆகாடி (விபிஏ) தலைவராக உள்ள பிரகாஷ் அம்பேத்கர், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஜனாதிபதி போட்டியில் இருந்து விலக வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பிரகாஷ் அம்பேத்கர் செளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திரவுபதி முர்முவிற்கு ஆதரவாக வாக்களிக்க கட்சிகள் பலவற்றில் இருந்து, பல பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் இணைந்திருப்பதால், ஜனாதிபதி தேர்தலில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.



Next Story