பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 5 சிறுமிகள் மீட்பு


பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 5 சிறுமிகள் மீட்பு
x

தார்வார் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த 5 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

உப்பள்ளி;

தார்வார் பழைய பஸ் நிலையம் அருகே சிறுமிகள் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது பஸ் நிலையம் அருகே உள்ள கடைகளில் 5 சிறுமிகள் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். இதையடுத்து அதிகாரிகள், 5 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

மேலும் சிறுமிகளை பிச்சை எடுக்க வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story