27-ந்தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு


27-ந்தேதி நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
x

எனவே இந்த வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வங்கிகளுக்கு சனி, ஞாயிறு தினங்களில் விடுமுறை, வங்கி ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து வருகிற 27-ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் தலைமை தொழிலாளர் கமிஷனர் எஸ்.சி.ஜோஷி, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டது.

எனவே இந்த வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

இந்த தகவலை இந்திய வங்கி ஊழியர்களின் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்து உள்ளார்.


Next Story