அதானி விவகாரம்: வங்கிகள் நிலை சீராக உள்ளது - ரிசர்வ் வங்கி தகவல்


அதானி விவகாரம்: வங்கிகள் நிலை சீராக உள்ளது - ரிசர்வ் வங்கி தகவல்
x

கோப்புப்படம்

அதானி பங்குகள் சரிந்துள்ளநிலையில் வங்கிகள் நிலை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி பெரும் விவகாரமாக வெடித்துள்ளநிலையில், அதானி குழுமத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இந்திய வங்கிகள் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடையதாகவும் உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே அதானி குழுமத்திற்கு இந்திய வங்கிகள் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளன. இது, அந்த குழுமத்தின் மொத்த கடனில் 38 சதவீதம் ஆகும். அதிகமாக எஸ்பிஐ (SBI) 21 ஆயிரம் கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளன. மேலும் சில தனியார் வங்கிகளும் கடன் வழங்கி உள்ளன.

இந்நிலையில் அதானி பங்குகள் சரிந்துள்ளநிலையில் வங்கிகள் நிலை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "முதலீடு வளம், சொத்துகளின் தரம், லிக்விடிட்டி லாபம் என பல்வேறு வரையறைகளிலும் இந்திய வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக உள்ளது. இந்திய வங்கிகளின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய ஆய்வின்படி வங்கித்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story