கொலையான பா.ஜனதா பிரமுகர் பிரவீன் குடும்பத்தினருக்கு பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல்


கொலையான பா.ஜனதா பிரமுகர் பிரவீன் குடும்பத்தினருக்கு பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல்
x

கொலையான பா.ஜனதா பிரமுகர் பிரவீன் குடும்பத்தினருக்கு பசவராஜ் பொம்மை நேரில் ஆறுதல் கூறினார்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன், கடந்த 26-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று கொலையான பிரவீனின் வீட்டுக்கு நேரில் சென்றார். பின்னர் அவர், பிரவீனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அரசு சார்பில் பிரவீனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். முன்னதாக பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் வந்த பசவராஜ் பொம்மை, மங்களூரு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story