பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் 11 பேர் விடுதலை இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார  வழக்கு குற்றவாளிகள் 11 பேர் விடுதலை இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2022 7:45 AM GMT (Updated: 16 Aug 2022 8:05 AM GMT)

குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் தற்போது குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அகமதாபாத்

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யபட்டனர்.

இந்த வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

குற்றவாளிகள் 15 வருடங்கள் சிறையில் கழித்தனர். அதில் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்னதாக விடுதலை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து கருத்தில் கொள்ளுமாறு குஜராத் அரசை சுப்ரீம்கோர்ட் கேட்டுக் கொண்டது. இதை தொடர்ந்து குஜராத் அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டிக்கு பஞ்ச்மஹால் கலெக்டர் சுஜல் மயாட்ரா தலைமை தாங்கினார்.

குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் தற்போது குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சிறையில் இருந்து விடுதலையான பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து பேசிய பஞ்ச்மஹால் கலெக்டர் சுஜல் மயத்ரா, "சில மாதங்களுக்கு முன்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அந்த முடிவு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யபட்டனர். 20 வயதான பானு 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். பில்கிஸின் கண்முனே அவரது மூன்று குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பில்கிஸ் பானு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று உயிர்ப்பிழைத்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையை சேர்ந்த சிலர் பில்கிஸ் பானுவை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர்.

பில்கிஸ் பானுவை மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். பில்கிஸ் பானுவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரிக்கப்பட்டன.

இருப்பினும் பில்கிஸ் பானு தொடர்ந்து போராடினார். குற்றவாளிகளை அடையாளம் கண்டார். இதுகுறித்த முதல் கைது கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானுவின் வழக்கு மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.


Next Story