கேரளா: ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு - அதிர்ச்சி சம்பவம்


கேரளா: ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு - அதிர்ச்சி சம்பவம்
x

கேரளாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயனூரில் இந்து மத அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சங்க் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில், பயனூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது இன்று அதிகாலை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தின் ஜன்னல் வழியாக இந்த வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் அலுவலகத்தின் கதவுகள் உடைந்தன. மேலும், அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் உடைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story