ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி சாவு


ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி சாவு
x

ஆண்டர்சன்பேட்டையில் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்:-

ஏரியில் குளிக்க சென்றனர்

கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையை அடுத்த கோனமாகனஹள்ளியை சேர்ந்தவர் லோகேஷ் குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 14). தனியார் பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வந்தான். இதேபோல அதே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகன் லோகேஸ்வரி (11). இந்த சிறுமி 6-வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் 2 பேரும் பள்ளிக் கூடம் முடிந்ததும், ஏரியில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. ஆழமான அதிகமாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

நீரில் மூழ்கி சாவு

இதையடுத்து 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதற்கிடையில் இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரும் நீரில் மூழ்கியதை பார்த்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story