பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி


பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி
x

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் கருத்தரித்துள்ளார். ஆனால், கருத்தரித்தது குறித்து 21 வாரங்களுக்கு பின்பே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 23 வார கருவை கலைக்க பாதிக்கப்பட்ட பெண் முடிவெடுத்துள்ளார். ஆனால், இந்தியாவில் 20 வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 வாரங்களுக்கு மேல் கரு வளர்ந்துவிட்டால் கோர்ட்டின் அனுமதி பெற்றுமட்டுமே கருவை கலைக்க முடியும்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி, கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தான் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாலும், குழந்தையை பராமரிக்க தன்னால் முடியாது என்பதாலும் 23 வார கருவை கலைக்க அனுமதிக்கும்படி பாதிக்கப்பட்ட இளம்பெண் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இளம்பெண்ணின் 23 வார கருவை கலைக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்ணின் கருவை கலைக்க 48 மணிநேரத்தில் நிபுணர் குழு அமைத்து பாதுகாப்பான முறையில் கருவை கலைக்கும்படி தெற்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story