பல்கலைக்கழக ஆபாச வீடியோ : மாணவிகள் குளிக்கும் வீடியோக்களை எடுத்து கொடுக்க மிரட்டிய கும்பல்


பல்கலைக்கழக ஆபாச வீடியோ : மாணவிகள் குளிக்கும் வீடியோக்களை எடுத்து கொடுக்க மிரட்டிய கும்பல்
x

PTI

மாணவிகள் குளிக்கும் வீடியோக்களை எடுத்து தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் மாணவியை மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சண்டிகார்

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதாக வதந்தி பரவியது. மொத்தம் சுமார் 60 மாணவிகளின் வீடியோ இணையத்தில் லீக் ஆனதாகத் தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகள் கடந்த 17-ந்தேதி நள்ளிரவுக்குப்பின் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவியும், அந்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.

பிற மாணவிகள் ஆபாசமாக படமெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து நேற்று அதிகாலையில் மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அத்துடன் கல்லூரிக்கு வருகிற 24-ந்தேதி வரை விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி குர்பிரீத் கவுர் திேயா மேற்பார்வையில் 3 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சம்பவத்தை முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில போலீஸ் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தெரிவித்தார்.

வீடியோக்களை எடுத்து தங்களிடம் பகிர வேண்டும் என்று அந்த இளைஞர்கள் வீடியோ எடுத்த மாணவியை மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சன்னி மேத்தா மற்றும் அவரது நண்பர் ரங்கஜ் வர்மா ஆகியோர், மற்ற மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்துத் தர வேண்டும் என்று அந்த மாணவியை மிரட்டி உள்ளனர். அப்படியில்லை என்றால் தங்களிடம் உள்ள அந்த (வீடியோ எடுத்த) மாணவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவோம் என்று அவர்கள் பிளாக் மெயில் செய்ததாகத் தெரிகிறது.


Next Story