பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது- பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது- பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்
x

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மொகாலி,

பஞ்சாப் மாநிலத்தில் அமலில் இருந்த ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றர்.

ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் என அக்கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான ஹர்பால் சிங் சீமா வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்-மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றுவது குறித்து எனது அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளரிடம் கேட்டுள்ளேன். எங்கள் ஊழியர்களின் நலனுக்காக நாங்கள் உறுதியாக இருக்கிறோம். " இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Next Story