புதிதாக 49 பேருக்கு கொரோனா


புதிதாக 49 பேருக்கு கொரோனா
x

புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 2 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 49 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 34 பேர் பாதிக்கப்பட்டனர். 24 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. நேற்று புதிதாக உயிரிழப்பும் இல்லை.

இதுவரை 40 லட்சத்து 70 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 260 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 40 லட்சத்து 28 ஆயிரத்து 221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1,859 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.


Related Tags :
Next Story