சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு குறைந்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை


சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு குறைந்து வருகிறது - மத்திய சுகாதாரத்துறை
x

சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாடு குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் காணொலி வாயிலாக கலந்துரையாடியனார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உந்துதல் தேவை என்று எடுத்துரைத்தார். தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மாநில சுகாதாரத்துறை முன்னெடுக்க வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடு, வீடாக சென்று அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை என்பதையும், தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story