கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டியை நியமிக்க முடிவு?


கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டியை நியமிக்க முடிவு?
x

கர்நாடக மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இநத கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீர்மானித்துள்ளார். கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதன் காரணமாக பா.ஜனதாவை சேர்ந்த மேல்-சபை உறுப்பினர் ஒருவரே தலைவராகும் நிலை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்க பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்த போது, மேல்-சபை தலைவர் பதவி வழங்குவதாக பசவராஜ் ஹொரட்டிக்கு உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

மேல்-சபை தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி குறித்து மேல்-சபை உறுப்பினர்களுடன், பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார். இதில், துணை தலைவர் பதவியை பிரானேசுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு வழங்க திர்மானித்திருந்தாலும், அதுபற்றி பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து, இந்த வாரமே மேல்-சபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.


Next Story