கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
கலபுரகி: கலபுரகி மாவட்டம் ஆலந்தா டவுனை சேர்ந்தவர்கள் ஸ்ரீசைல் ஹிரபுரா (வயது 13), லட்சுமண் மடிவாளா (12). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் 2 பேரும் நீச்சல் அடித்து பழக அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது 2 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆலந்தா போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி ஆலந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





