இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் - 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் - 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை
x

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கணித்துள்ளது.

புதுடெல்லி

2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு 2023 கணித்துள்ளது.

ஆய்வு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கொரோனா காலத்தில் நெருக்கடி மேலாண்மையில் சுய உதவிக் குழு பெண்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டி உள்லது. சுய உதவிக்குழுக்களால் முகக்கவசங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருந்தது.

தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கூட முகக்கவசங்களை அணுகவும் பயன்படுத்தவும் உதவியது.

4 ஜனவரி 2023 நிலவரப்படி, 16.9 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டன.

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமான 4.6 டாலர்களுடன் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது

பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை பெருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஆதரவு விலை பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான கவனம் செலுத்தும் தலையீடுகள்" ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உறுதியான வருவாயை உறுதி செய்வதே இந்தத் துறையின் வளர்ச்சி என்று சர்வே கூறுகிறது.

கடன் கிடைக்கும் தன்மை, இயந்திரமயமாக்கலை எளிதாக்குதல் மற்றும் தோட்டக்கலை மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் இவைகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான கமிட்டியின் பரிந்துரைகளின்படி இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீத மக்கள் (2021 தரவு) கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருப்பதாகவும் பொருளாதார ஆய்வு 2023 குறிப்பிடுகிறது.

எனவே, கிராமப்புற வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசின் முக்கியத்துவம் உள்ளது

கடன் வாங்கும் செலவுகள் "நீண்ட காலத்திற்கு அதிகமாக" இருக்கும் என்றும், வேரூன்றிய பணவீக்கம் இறுக்கமான சுழற்சியை நீடிக்கலாம் என்றும் அறிக்கை எடுத்துக்காட்டியது.

பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட மற்றொரு கவலைக்குரிய விஷயம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ( சிஏடி) அதிகரித்து வருகிறது. உலகளாவிய பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதால் சிஏடி தொடர்ந்து விரிவடையும் என்று சர்வே கூறுகிறது. மேலும் விரிவடைந்தால், அது ரூபாயின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.


Next Story