ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு


ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு
x

இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

அமராவதி,

ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். மேலும் இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியவர். அதன் பிறகு சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்துள்ளார். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகார பூர்வமான செய்தியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Next Story