தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 26 July 2023 6:46 PM GMT)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குடும்ப பிரச்சினை இருப்பதாக கூறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டன்பேட்டை:-

பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(வயது 25). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஐஸ்வர்யாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது கணவர் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் ஒரு அறைக்கு ஐஸ்வர்யா சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அல்சூர்கேட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story