பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2023 6:45 PM GMT (Updated: 25 Feb 2023 6:46 PM GMT)

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நந்தினி லே-அவுட்:

பெங்களூரு நந்தினி லே-அவுட் ஜெய் மூர்த்திநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (வயது 23). இந்த தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மைசூருவை சேர்ந்த அவர்கள், கடந்த 9 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூருவுக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென காவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story