ஜனாதிபதி திரவுபதி முர்முவின் முதல் நியமன உத்தரவு


ஜனாதிபதி திரவுபதி முர்முவின் முதல் நியமன உத்தரவு
x

கோப்புப்படம் 

ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

புதுடெல்லி,

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் திரவுபதி முர்மு தனது முதல் நீதித்துறை நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். ஜனாதிபதி முர்மு கையெழுத்திட்ட முதல் நியமன உத்தரவு இது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நீதித்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய அரசியலமைப்பின் 224-வது பிரிவு (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை ஜனாதிபதி நியமித்துள்ளார்' என்றார். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் 25 ஐகோர்ட்டுகளின் நீதிபதிகள் நியமனத்திற்கான உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திட உள்ளார்.


Next Story