வேளாங்கண்ணி வந்த மேகாலயா முதல் மந்திரி - பேராலயத்தில் பிரார்த்தனை


வேளாங்கண்ணி வந்த மேகாலயா முதல் மந்திரி - பேராலயத்தில் பிரார்த்தனை
x

மேகாலயா முதல் மந்திரி கொன்ராட் சங்க்மா, வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

நாகப்பட்டினம்,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மேகாலயா முதல் மந்திரி கொன்ராட் சங்க்மா பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்த அவரை நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் பங்குத்தந்தை ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கொன்ராட் சங்க்மா தனது மனைவியுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.


Next Story